பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்தவானி வாக்குமூலம்
1 min read
Attawani’s confession in the Babri Masjid demolition case
24-7-2020
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.
பாபர் மசூதி இடிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பாரதீய ஜனதாவின் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, வேண்டுமென்றே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக வாக்கு மூலம் அளித்தார்.
அத்வானி
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அவரிடம் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.
அத்வானியின் வக்கீல்கள் விமல் குமார் ஸ்ரீவத்சவா, கே.கே.மிஸ்ரா, அபிஷேக் ரஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர். சி.பி.ஐ., தரப்பு வக்கீல்கள் லலித் சிங், பி.சக்கரவர்த்தி, ஆர்.கே.யாதவ் ஆகியோர் ஆஜராகினர். சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவ், இந்த வழக்கை விசாரித்தார்.