May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆன் லைன் சூதாண்டத்துக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

1 min read
ICourt instruction to ban online gambling

24-7-2020

ஆன் லைன் மூலம் பணம் வைத்து விளையாடும் ரம்மி சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஆன் லைன் சூதாட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும் எனது நண்பரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீசார் ஊரடங்கு விதிகளை மீறியதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பொது இடங்களில், நடைபாதைளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சீட்டு விளையாடினால் வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத்தான் விளையாடினோம். எனவே எங்கள் மீதான வழக்கினை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் இருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:-

தடை


லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ததன் மூலம் தற்கொலைகள் மற்றும் அந்த குடும்பத்தின் வறுமையை தமிழக அரசு போக்கி உள்ளது. தற்போது ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி போன்ற விளையாட்டுகள் மூலம் இளைஞர்களின் பணம் சூறையாடப்படுகிறது. குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் சிந்திக்கும் திறன், மற்றும் நேரத்தை கெடுக்கிறது.

தெலுங்கானாவில் தற்போது ஆன்லைனில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள. அதேபோல் மத்திய-மாநில அரசுகள் இந்த வகை ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.