June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“சமஸ்கிருதம் படிப்பவர்களை வணங்குகிறேன்”; மோடி கூறுகிறார்

1 min read


“I adore those who study Sanskrit”; Modi says

3-8-2020

“அழகிய மொழியைப் படிக்கும் அனைவரையும் நான் வணங்குகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

சமஸ்கிருதம்

ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு சிரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் பவுர்ணமி நாளை, உலக சமஸ்கிருத நாளாக கொண்டாடுகிறார்கள். அதன்படி 3-8-2020 (திங்கட்கிழமை) உலக பவுர்ணமி அன்று உலக சமஸ்கிருத நாள் கொண்டாடபட்டது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது, டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலக சமஸ்கிருத தினத்தில், அழகிய மொழியை படிக்கும், ஊக்குவிக்கும் அனைவரையும் நான் வணங்குகிறேன். வருங்காலத்தில், சமஸ்கிருதம் நல்வளத்துடன் வளர வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவை இணைக்கும் இணைப்பு சமஸ்கிருதம்” என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.