June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தகாத முறையில் தொட்டார்- கொரோனா பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

1 min read

4.8.200

Touched inappropriately- the cruelty done to the woman affected by the corona

பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கும் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த பெண் நோயாளியிடம் தகாத முறைகளில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம்  கடந்த ஜூலை 25ம் தேதி இரவு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கூறிய பாதிக்கப்பட்ட பெண், பரிசோதனை செய்வதாக கூறி அறைக்குள் நுழைந்த மருத்துவர் தன்னுடைய அனுமதியின்றி உடலின் பாகங்களை தகாத முறையில் தொட்டதாகவும், மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, கொரோனா வார்டின் நோடல் அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த ஜூலை 30ம் தேதி மருத்துவமனையில் புகார் அளிக்கப்பட்ட பின் வி.வி.புரம் காவல் நிலையத்திலும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் இதுவரை போதுமான விவரங்களை வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, சம்பவம் நடந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறும் போது, இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவரை அடையாளம் காட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனை தனது அறிக்கையின் விவரங்களை போலீசில் சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.