May 29, 2024

Seithi Saral

Tamil News Channel

துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ. 24.5 கோடி பரிசு

1 min read


Indians win Rs. 24.5 crore prize
in Dubai lottery

4-8-2020
துபாயில் நடந்த லாட்டரி குலுக்கலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.24.5 கோடி பரிசு கிடைத்தது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தீபன்கர் டே (வயது 37). இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு கண் பார்வை பரிசோதகரான வேலை பார்த்து வருகிறார்.
துபாயில் பரபரப்பாக விற்பனையாகும், ‘மெகா பிக் டிக்கெட்’ என்ற லாட்டரி சீட்டை இவர் வாங்கினார். நேற்று நடந்த குலுக்கலில் அவருக்கு, முதல் பரிசுகிடைத்தது

24.51 கோடி ரூபாய்

அந்த லாட்டரி மூலம் அவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ.24 கோடியே 51 லட்சமாகும்.

பேட்டி

இதுகுறித்து தீபன்கர் டே கூறியதாவது:-
நான் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில், கண் பார்வை பரிசோதகராக, 9 ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கிறேன். தற்போது கொரோனாவால் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இப்படியான சூழலில் எனக்கு இந்த பரிசு கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பணத்தை, என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என, 11 பேருடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். மேலும், இந்த பரிசுத்தொகையில் என் மகளை நன்றாக படிக்க வைக்க செலவு செய்வேன்.

‘எனது மனைவியும் மகளும் சில மாதங்களுக்கு முன், இந்தியாவுக்குச் சென்றனர். கொரோனாவால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. எனது இந்த மகிழ்ச்சியை அவர்களுடன் கொண்டாட முடியவில்லை என்பதே எனது தற்போதைய வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு தீபன்கர் டே கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.