தமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேருக்கு கொரோனா; 119 பேர் சாவு
1 min read
In tamil Nadu corona affected 5880 and death 119 today
7-8-2020
தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று 119 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தினமும் மாநில சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மட்டும் 5,880 பேர் கொரோனா தொறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,488 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர்.
119 பேர் சாவு
இன்று(வெள்ளிக்கிழமை) மட்டும் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின்மொத்த எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 65,189 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில்
சென்னையில் மட்டும் இன்று 984 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதிக்கு பிறகு முதன்முறையாக இன்றுதான் சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது.
தென்காசி 117 பேர்
தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதித்தவர்களின் எண்ணிக்கை வருமாறு:-
- அரியலூர் – 51
- சென்னை – 984
- செங்கல்பட்டு – 319
- கோவை – 228
- கடலூர் – 212
- தருமபுரி – 16
- திண்டுக்கல் – 134
- ஈரோடு – 67
- கள்ளக்குறிச்சி – 139
- காஞ்சிபுரம் – 166
- கன்னியாகுமரி – 187
- கரூர் – 26
- கிருஷ்ணகிரி – 46
- மதுரை- 109
- நாகப்பட்டினம்- 78
- நாமக்கல் – 34
- நீலகிரி – 13
- பெரம்பலூர் – 69
- புதுக்கோட்டை – 173
- ராமநாதபுரம் – 43
- ராணிப்பேட்டை – 253
- சேலம் – 168
- சிவகங்கை – 64
- தென்காசி – 117
- தஞ்சாவூர் – 217
- தேனி – 351
- திருப்பத்தூர் – 66
- திருவள்ளூர் – 388
- திருவண்ணமலை – 252
- திருவாரூர் – 44
- தூத்துக்குடி – 195
- திருநெல்வேலி – 200
- திருப்பூர் – 31
- திருச்சி – 105
- வேலூர் – 158
- விழுப்புரம் – 73
- விருதுநகர் – 101