June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளிகள் தங்கி இருந்த ஓட்டலில் தீவிபத்து;11 பேர் சாவு

1 min read


Fire accident in Vijavada hotel and 11 killed whose are corona pesect

9-8-2020

விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில்11பேர் இறந்தனர்.

ஓட்டலில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒட்டல் ஒன்று கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) காலையில் இந்த ஓட்டலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

11 பேர் சாவு

இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி இறந்தனர். தீவிபத்தில் இருந்து தப்பிக்க சிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் தீ யில் கருகி இறந்த சம்பவம் பெரிதும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

மோடி இரங்கல்

தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தற்போதைய நிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுடன் விவாதித்தேன். அனைத்து உதவியும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.