சனி, செவ்வாய் அவதரித்த நாளில் தோஷ பரிகாரம் செய்யலாமே!
1 min read
Tosha Parikaram on Saturday and Tuesday birthdays
10-8-2020
நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த நாளில் அவருக்கு அர்ச்சனை செய்து தோஷ பரிகாரம் செய்வது நல்லது. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை நவமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில்தான் சனிபகவான் பிறந்தார். இந்த ஆண்டு நவமி திதி ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் 10-52 மணி வரை நவமி திதி உள்ளது. அதிகாலை 2.21 மணிக்கு ரோகிணி நடத்திரம் ஆரபித்து மறுநாள் அதிகாலை 4.02 மணி வரை உள்ளது. எனவே 13-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.52 மணிக்குள் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். இதனால் சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் சனிபகவானுக்கு நீல வஸ்திரம் சாத்தி குவழை மலர்க¬ளால் அர்ச்சனை செய்து எள் சாதம் படைத்து வழிபடவேண்டும். மேலும் அப்போது எட்டு எள் விளக்குகள் ஏற்றுவதும் சிறப்பு.
தற்போது அருகில் உள்ள கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு மனதால் சனிபகவானை நினைத்தால்போதும். மேலும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்.
நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை துவிதியை திதியில் பிறந்தார். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 6-58 மணிக்குப் பிறகு துவிதியை திதி ஆரம்பமாகிறது. எனவே விடிந்தபின் செவ்வாய் கிரகத்திற்கு வழிபாடு நடத்தவேண்டும். அவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிவப்பு நிற மாலை சூடி, துவரம் பருப்பு படைத்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் 9 விளக்குகள் ஏற்றி வழிபடுவதும் சிறப்பு. இப்படி செய்தால் செய்வாய் தோஷம் நிவர்த்தியாகும். ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் இல்லாதவர்களும் இந்த வழிபாட்டை நடத்துவது நல்லது.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள முருகப்பெருமானை வணங்குங்கள். மேலும் ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடையையும் துவரம் பருப்பும் தானமாக கொடுக்கலாம்.