அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தமிழ்தாயின் மகள் போட்டி
1 min read
Tamiltai’s daughter contests for US vice presidency
13-8-2020
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தமிழ் தாயின் மகனான, கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
துணை அதிபர்
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அவர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது பிரச்சாரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கமலா ஹாரிஸ் துணிச்சலான போராளி . அதோடு மக்களுக்கான சிறந்த சேவகர். அவரை துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிசின் தாயார் கலிபோர்னியாவின், தற்போதைய செனட்டர் ஆவார். இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது .
விவாதம்
முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.
கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7ஆம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்; 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை.
சென்னையைச் சேர்ந்தவர்
கமலா ஹாரிசுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.
கமலா ஹாரிசின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.
கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவர் அவரது தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்.
கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.
கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.
இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.
கமலா எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் கூறியிருப்பதாவது:-
எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்.
நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்.
இவ்வாறு கமலா ஹாரிஸ் குறிப்பிட்டு உள்ளார்.
கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என்றும் கமலா ஹாரிஸ் சொல்கிறார்.
துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுமே அதிபர் வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.