July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரேநாளில் 5,950 பேருக்கு கொரோனா; 6,019 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

In Tamil Nadu 5.950 People affected for corona and discharch 6.019 today

16-8-2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,950 போருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

5,950 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) மட்டும் ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,918 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 32 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 135 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 70,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 37 லட்சத்து 11 ஆயிரத்து 246 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,585 பேர் ஆண்கள், 2,365 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,03,838 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,34,188 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,019 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆக உள்ளது.

125 பேர் சாவு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 125 பேர் இறந்தனர். இவர்களில் 86 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 39 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 54,019 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 16 ஆயிரத்து 385 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 903 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 ஆயிரத்து 767 பேர்.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் ம ட்டும் 1,196 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,16,650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர, இன்று திருவள்ளூரில் 488 பேருக்கும், செங்கல்பட்டில் 436 பேருக்கும், கோவையில் 395 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 307 பேருக்கும், வேலூரில் 264 பேருக்கும், தேனியில் 205 பேருக்கும், புதுக்கோட்டையில் 187 பேருக்கும், கடலூரில் 185 பேருக்கும், சேலத்தில் 177 பேருக்கும், ராணிப்பேட்டையில் 152 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 130 பேருக்கும், தென்காசியில் 86 பேருக்கும், தூத்துக்குடி 94 பேருக்கம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருநெல்வேலியில் 7 பேரும், மதுரை, புதுக்கோட்டையில் தலா 6 பேரும், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகரில் தலா 5 பேரும், ஈரோடு, திருவண்ணாமலையில் 4 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூரில் தலா 3 பேரும், கடலூர், ராணிப்பேட்டை, தென்காசி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவாரூர், திருச்சியில் தலா ஒருவரும் என 125 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 1,009 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,02,698 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 422 பேரும், விருதுநகரில் 379 பேரும், தேனியில் 319 பேரும், சேலத்தில் 309 பேரும், காஞ்சிபுரத்தில் 307 பேரும், திருவள்ளூரில் 294 பேரும், தென்காசியில் 270 பேரும், ராணிப்பேட்டையில் 248 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மீண்டும் ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழாக இருந்தது. இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.