எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்
1 min read
SB Balasubramaniam recovered from a coma
16-8-2020
பின்னணி பாடகர் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மயக்கநிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மயக்கம் தெளிந்தது
இந்த நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தற்போது மயக்கநிலையில் இருந்து தெளிந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.