காணாமல் போன மருமகள் கிடைக்க நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய மாமியார்
1 min read
The mother-in-law cut out the tongue and paid tribute to the missing daughter-in-law
18-8-2020
காணாமல் போன மருமகள் கிடைக்க வேண்டும் என்று மாமியார் தனது நாக்கை வெட்டி கோவிலில் காணிக்கை செலுத்தி வழிப்பட்டார்.
மாமியார்-மருமகள்
மாமியார், மருமகள் என்றால் எலியும் பூனையுமாகதான் இருப்பார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மருமகளை மகளாகவும் மாமியாரை தாயாகவும் பாவிக்கும் பெண்கள் உண்டு.
ஆனால் இங்கே மருமகளுக்காக தனது காக்கை வெட்டிய மாமியார் செய்தி நம்மை ஆச்சரிப்பட வைக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
காணாமல் போன மருமகள்
ஜார்க்கண்ட் மாநிலம் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் உள்ள என்.ஐ.டி. பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நிர்லா. இவரது மருமகள் ஜோதி. இவர் கடந்த 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை )தனது குழந்தையுடன் காணாமல் போனார்.
காணாமல் போன தாயையும் குழந்தையையும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் ஜோதியின் கணவர் தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நாக்கை அறுத்து காணிக்கை
மருமகள் காணாமல் போனது அவரது மாமியார் லட்சுமிக்கு மிகுந்த வேதனை . தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்சுமி அங்குள்ள சிவபெருமான் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து காணிக்கையாக கொடுத்தார்.
இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் முதலில் லட்சுமி ஆஸ்பத்திரி செல்ல மறுத்தார். ஆனால் பின்னர் அவர் சமாதானப்படுத்தப்பட்டு ஜாம்ஷெட்பூரின் எம்.ஜி.எம்.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார் இருப்பினும், அந்தப் பெண்ணால் பேச முடியவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து லட்சுமியின் கணவர் நந்து லால் நிராலா கூறும் போது, நாக்கை கடவுளுக்கு காணிக்கையாக வழங்கினால், ஜோதி திரும்பி வருவாள் என்று யாரோ அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி அவர் இதனை செய்து விட்டார் என கூறினார்.