மாலியில் ராணுவ புரட்சி; அதிபர், பிரதமர் கைது
1 min read
Military coup in Mali; President, Prime Minister arrested
19-8-2020
மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலி
மேற்குஆப்ரிக்க நாடான மாலி நாட்டில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளது. அதை அந்த நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா ஒடுக்க தவறியதாக குற்றம் சாட்டுப்பட்டது. மேலும் அவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இதனால் இப்ராகிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ராணுவ புரட்சி
இந்த நிலையில் அந்த நாட்டில் திடீரென்று ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் நேற்றுஆயுதங்களுடன் தலைநகர் பமாகோவில் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர்.
மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன.
ராணுவ புரட்சி ஏற்பட்டதை அடுத்து பிரதமர் பவ்பவ் சிஸ்சே ராணுவ உயரதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அதில் எந்த பலனும் இல்லை. எந்த ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
கைது
இந்த நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாலி நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுதலை செய்யக் கோரிக்கை
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ், செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், கூறியிருப்பதாவது:-
மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிபாக கவனித்து வருகிறது. முதலில் அதிபர், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.