தமிழகத்தில் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,980 people in one day in Tamil Nadu
தமிழகத்தில் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா
22-8-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5,980 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) மலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( சனிக்கிழமை) மட்டும் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 5,957 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 23 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 139 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 73,547 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 41 லட்சத்து 36 ஆயிரத்து 490 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,665 பேர் ஆண்கள், 2,315 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,25,418 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,47,963 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரேனாா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,603 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்து 280 ஆக உள்ளது.
80 பேர் சாவு
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 80 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 57 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,710 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 17 ஆயிரத்து 716 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 8 ஆயிரத்து 46 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 47 ஆயிரத்து 648 பேர்.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,294 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,24,071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 406 பேருக்கும், கோவையில் 389 பேருக்கும், திருவள்ளூரில் 384 பேருக்கும், கடலூரில் 309 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், வேலூரில் 244 பேருக்கும், புதுக்கோட்டையில் 154 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 140 பேருக்கும், தென்காசியில் 137 பேருக்கும், தூத்துக்குடியில் 120 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு இன்று சென்னையில் 11 பேரும், கடலூர், திருநெல்வேலியில் தலா 5 பேரும், கோவை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரத்தில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூரில் தலா 3 பேரும், நாமக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 2 பேரும், அரியலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திருப்பத்தூர், திருப்பூரில் தலா ஒருவரும் என 80 பேர்இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,053 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,08,545 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 393 பேரும், திருவள்ளூரில் 384 பேரும், காஞ்சிபுரத்தில் 362 பேரும், கோவையில் 312 பேரும், ராணிப்பேட்டையில் 272 பேரும், கடலூரில் 224 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.