June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல்

1 min read

IPL Suresh Raina withdraws from cricket series

29-8-2020

இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகினார்.

சுரேஷ்ரெய்னா

ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் முதல் நவம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக சென்னை அணியினர், கடந்த 21-ந் தேதி துபாய் சென்றனர்.
அவர்கள் அங்குள்ள ஓட்டலில் 6 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டனர். பின்னர் முதற்கட்ட பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கூடுதலாக 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

விலகல்

இந்த நிலையில், சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
சொந்த காரணங்களுக்காக அவர் இந்தியா திரும்பியதாக சென்னை அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர், இந்த தொடரில் விளையாட மாட்டார் எனவும், சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்திற்கு சென்னை அணி நிர்வாகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.