இந்தியாவில் ஒரேநாளில் 64,051 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn India, 64,051 people recovered from the corona one day
29-8-2020
இந்தியாவில் கொரோனாவில் இருந்து நேற்ற ஒரே நாளில் 65,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை . அதேநேரம் கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கும் விசயம்.
கொரோனா பரவல் பற்றிய விவரங்கள் தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 76,472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மட்டும் கொரோனாவுக்கு 1,021 பேர் இறந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 26 லட்சத்து 48 ஆயிரத்து 999 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 62,550 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தற்போது 7 லட்சத்து 52 ஆயிரத்து 424 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.