இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர்
1 min read
More than 2 lakh people have recovered from Corona in India
2-9-2020
இந்தியாவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானேோர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவல் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் குணம் ஆனவரின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
கொரோனா பரவல் பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( புதன்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 78,357 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 37,69,524 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1045 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டுமு் 62,026 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,019,09 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,01,282 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் 10,12,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. நேற்று வரை மொத்தம் 4,43,37,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
முதலிடம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மராட்டிய மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 8 லட்சத்து 8 ஆயிரத்து 306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5,84,537 பேர் குணம் அடைந்துள்ளனர். 24,903 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் 4, 45,139 பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,39,876 பேர் குணம் அடைந்துள்ளனர். 4,053 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த மாநிலத்தில் நேற்று வரை 4,33,969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,74,172 பேர் குணம் அடைந்துள்ளனர். 7,418பேர் இறந்துள்ளனர்.
கெரோனா பாதிப்பில் கர்நாடகம் 4 வது இடத்திலும் உத்தரபிரதேசம் 5-வதுஇடத்திலும், டெல்லி 6-வது இடத்திலும் உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.