June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 9 பெண்கள் பலி

1 min read

9 women killed in firecracker factory accident near Kattumannarkovil

4-9-2020
காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 9 பெண்கள் இறந்தனர்.

பட்டாசு ஆலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி என்ற ஊரில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று திடீரென்ற வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெண்கள். பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முதல் அமைச்சர் இரங்கல்

இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , வெளியிட்ட அறிக்கையில், “பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.