June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா மனிதவள ஆற்றலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது; மோடி பேச்சு

1 min read

Corona has taught us how to use human resources; Modi’s speech

3-9-2020
மனிதவள ஆற்றலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை கொரோனா நமக்கு கற்பித்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மோடி

அமெரிக்க – இந்திய உத்திகள் திட்டமிடல், பங்களிப்பு மாநாட்டில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
2020ம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா? இப்படியான இக்கட்டான சூழல் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டோம். உலகையே உலுக்கி இருக்கும் கொரோனா பரவல், தனிமனிதன் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

புதிய சிந்தனை

கொரோனா வைரஸ் உலகையே முடக்கி போட்டு விட்டது. ஆனாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது.
இதுவரை இல்லாத நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதிய சிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதவள ஆற்றலை நமது மேம்பாட்டுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற புதிய சிந்தனையை விதைத்துள்ளது.

கொரோனா காலம், மனிதவள ஆற்றலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது.

நம்பிக்கை

இந்தியாவில் மருத்துவ வசதிகளை விரைவாக உருவாக்கியதால், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் விகிதமும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலவிவகாரங்களை பாதித்துள்ள போதும், 130 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை பாதிக்க முடியவில்லை.
இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.