டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலங்கள் இயங்கும்; தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Government offices are open on Saturdays until December
4-9-2020
டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரமணாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பல அரசு அலுவலகங்களும் மூடப்பட்டதால் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது.
ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு காலத்திலேயே அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.
மேலும் கடந்த 1-ந் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
சனிக்கிழமை
ஆனாலும் பொதுமக்கள் சேவைகள் ஊரடங்கு காரணமாக தேக்க நிலையை அடைந்து உள்ளது. பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அரசு அலுவலகங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
அவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.