July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

1 min read

Father commits suicide by hanging his son with a scythe in Nellai

6-9-2020

நெல்லையில் குடும்பத்தகராறில் மகனை வெட்டிய அரிவாளால் வெட்டிய தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தகராறு

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வெங்கடேஷ்வரா தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ். பெயிண்டர். இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் டேவிட் கோவையில் தங்கி அங்குள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக டேவிட் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திம்மராஜபுரத்திற்கு வந்துவிட்டார்.

ஊரடங்கு காரணமாக தொழில் சரிவர இல்லாததால் அற்புதராஜ் வீட்டிலே இருந்துள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகைப்பணம் கொடுக்கவில்லை.
இதனால் கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. பெற்றோரின் சண்டையைடேவிட் பலமுறை சமாதானம் செய்துவைத்துள்ளார்.

மகனுக்கு அரிவாள் வெட்டு

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் வாடகைப் பணத்தை கேட்டார். அற்புதராஜ் விரைவில் தருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அற்புதராஜ் மற்றும் விஜயா இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது அற்புதராஜ், விஜயாவை தாக்கியுள்ளார். இதனை மகன் டேவிட் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அற்புதராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் டேவிட்டை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அற்புதராஜை தேடிவந்தனர். இதற்கிடையே மகனை அரிவாளால் வெட்டியதில் மனமுடைந்த அவர் வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சென்று டேவிட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.