June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ராஜினாமா செய்கிறார்கள்

1 min read

More than a thousand government doctors are resigning in the UK

6-9-2020

இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் சரியான சம்பவளம் வழங்காததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்து

உலகையை ஆட்டிப்படைக்கு கொரோனா இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அந்த நாட்டில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா நெருக்கடி குறித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சங்கம், அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.
அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்விவரம் வருமாறு:-

ராஜினாமா?

கொரோானா பரவல் காரணமாக அங்கு பணியாற்றும் அரசு டாக்டர்களில் 69 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. முறையான ஊதிய உயர்வும் அளிக்கப்படாததால் அவர்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்றுவிட்டனர். இதனால் பலர் ராஜினாமா செய்துவிட்டு மருத்துவ தொழிலிலிருந்து இடைவெளி எடுக்க உள்ளனர். பலர் வெளிநாடு சென்று பணியாற்ற விரும்புகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூறும்போது“எங்கள் பணிகளுக்காக கைதட்டி கவுரவித்ததும், அவர்களின் நடவடிக்கைகளும் முரணானதாக இருந்தது. மருத்துவர்களை இந்த அரசு வெறும் பொருளாக தான் கருதுகிறது. மோசமான ஊதியம், மோசமான நிலைமை, பிபிஇ கிட்கள் பற்றாக்குறை, அரசியல் ஆதாயத்திற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் 20 ஆண்டுகள் அரசு பணியில் இருந்தவர்களையும் பாதித்துள்ளது.” என்கின்றனர்.

காலியிடம்

ஏற்கனவே இங்கிலாந்து அரசு மருத்துவமனைகளில் 8,278 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி விலக முடிவு செய்துள்ளது அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.