கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்
1 min read
2 thousand mini clinics in Tamil Nadu for corona testing
8-9-2020
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறையினருடன் இன்று( செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
2 ஆயிரம் மினி கிளினிக்
- மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது
- கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
- பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறைகிறது
- கொரோனா பரிசோதனையை அதிகளவில் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும்.
- ஆரம்ப சுகாதார நலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளினிக் அமைக்கப்படும்
- டாக்டர், நர்சுகள், மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
அபராதம்
- 40 சதவீத மக்கள் மாஸ்க் அணிவது இல்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
- ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சி வாங்க அதிகம் குவிகின்றனர். அப்போது சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்
- இறைச்சி வாங்க குவியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- காசிமேடு துறைமுக பகுதியில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும்.
மெரினா கடற்கரை
- சென்னை மெரினாவில் மக்கள் கூடுவதை போலீசார் தடுக்க வேண்டும்
- தளர்வுகளால் மக்கள் அதிகம் கூடுவதால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
- டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.