இந்தியா எல்லையை தாண்டி துப்பாக்கி சூடு நடத்தியதாம்- சீனா அபாண்டம்
1 min read
India fired across the border – China apandam
8-9-2020
இந்திய ராணுவம் எல்லையைத் தாண்டிச் சென்று சீன ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஷோ லிஜ்யான் தெரிவித்துள்ளதாவது:-
துப்பாக்கி சூடு
லடாக் பகுதியில் இந்திய ராணுவம், இந்திய – சீன எல்லையை தாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்தியா நடந்துகொண்டுள்ளது. சமாதான உடன்படிக்கை மூலமாக மட்டுமே இதற்கு தீர்வுகாண வேண்டுமே தவிர, அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் எல்லை பிரச்னை மேலும் அதிகரிக்கும்.
இனி அறிவிப்பு இன்றி, இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் சீனாவும் திருப்பித் தாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுப்பு
சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவ மறுத்திருந்தது.
‘ஷென்பாவ் மலைத்தொடர் அருகே, இந்தியா கடந்த 1-நங தேதி ‘எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு’ நடத்தியதாக சீனா கூறுகிறது. பாங்காங் ஏரி அருகே, சீன ராணுவமும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.