அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து; மத்திய மந்திரி தகவல்
1 min read
Corona vaccine by March next year; Centrall Minister Information
13-9-2020
வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு
கொரோனா தடுப்பூசிக்கான மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது . அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் மருந்து அறிமுகப்படுத்துவதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் (2021 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள்) இது தயாராகலாம்.
தடுப்பூசி மருந்துகளை தனி மனிதர்களிடம் சோதனை நடத்துவதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பு , செலவு, தேவை, உற்பத்திக்கான காலக்கெடு போன்றவை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இந்தியாவில் நடந்து வரும் தடுப்பூசி சோதனை குறித்து தற்போது எதையும் கணிக்க முடியாது. சோதனை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் உற்பத்தி தொடங்கப்படும். அடுத்த ஆண்டு (2021-ம் ஆண்டு) முதல் காலாண்டிற்குள் கொரோனா தடுப்பூசி மருந்து அறிமுகப்படுத்தப்படும்.
தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வாங்கும் திறனை பொருட்படுத்தாமல் கிடைக்க செய்ய மத்திய அரசு உறுதி அளிக்கும்
தற்போது கொரோனா மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் முதல் சோதனை மருந்தை நானே மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.