June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 78,400 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்

1 min read

In India, 78,400 people recovered from corona in one day

13-9-2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 78,400 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( சனிக்கிழமை ) மட்டும் 94,372 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 357 ஆக உயர்ந்தது.

டிஸ்சார்ஜ்

இந்தியாவல் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 1,114 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு 78586 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 78,400 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 37 லட்சத்து 2 ஆயிரத்து 596 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். தற்போது 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.