June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

1 min read

3 terrorists shot dead in Kashmir

16-9-2020

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் இங்கே தங்கி இருக்கும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஸ்ரீநகரின் பாட்டாமலூ பகுதியை போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


3 பேர் சுட்டுக் கொலை

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன. இருதரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்த்து

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தெடார்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.