June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் இதுவரை 41 லட்சத்து 12 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்

1 min read

So far 41 lakhs people in India have recovered from corona

18-9-2020

இந்தியாவில் இதுவரை மொத்தம் 41 லட்சத்து 12 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமானார்கள்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் குணமானோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதலான விசயம்.
இந்தியாவில் கொரோனா நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 96,424 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,14,678 ஆக உயர்ந்துள்ளது.

குணம் ஆனவர்கள்

இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 1,174 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 87472 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,25,080ல் இருந்து 41,12,552 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 10,17,754 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனாவுக்கு உயிரிழப்பு 1.63 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவீதமாக உள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6.15 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 6,15,72,343 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,06,615 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.