May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன கப்பல் விரட்டியடிப்பு

1 min read

Chase of a Chinese ship that infiltrated Indian territory

17-9-2020

இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்டது.

போர் கப்பல்கள்

சீனா துருப்புகள் இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் கடல் மார்க்கமாகவும் உளவு பார்க்க சீன தனது கப்பலை அனுப்பும்.
இதனால் இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம்(ஆகஸ்டு), யுவான் வாங் கிளாஸ் என்ற ஆராய்ச்சி கப்பல், மலாக்கா நீரிணை வழியாக, இந்திய பெருங்கடலில் நுழைந்தது. இதனை கண்டறிந்த இந்திய கடற்படை, சீன கப்பலை தொடர்ந்து கண்காணித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டது . இதனையறிந்த சீன கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீனா திரும்பியது.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் சீனா ஆராய்ச்சி கப்பல் ஷி யான்1, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் அருகே வந்தது. இதனை இந்திய கண்காணிப்பு விமானங்கள் கண்டறிந்து எச்சரித்தன. அதன்பின் அந்த கப்பல் திரும்பிச் சென்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.