சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 10 ஆண்டுகளில் 631 பேர் சாவு
1 min read
ewer cleaning workers kill 631 in 10 years
20-/9/-2020
சாக்கடை மற்றும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 631 பேர் கடந்த 10 ஆண்டுகளில் இறந்துள்ளதாக தேசிய சபாய் கரம் சாரிஸ் ஆணையம் கூறுகிறது.
சாக்கடை தொழிலாளர்கள்
இந்தியாவின் பல பகுதிகளிலும், பாதாள சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் விஷ வாயு கசிவால் மூச்சுத்திணறி இறந்து போகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இதனால் 631 பேர் இறந்துள்ளதாக தேசிய சபாய் கரம்சாரிஸ் ஆணையம்தெரிவித்து உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இத்தனை இறப்புகள் நிகழ்ந்துள்ளது.
இதில் 2019 ஆண்டில்தான் அதிகபட்சமாக 115 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாடு
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 122 பேரும், உத்தர பிரதேசத்தில் 85 பேரும், டெல்லி, கர்நாடக மாநிலங்களில் தலா 63 பேரும் குஜராத்தில் 61 பேரும், அரியானாவில் 50 பேரும் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டில் மார்ச் 31-ந்தேதி வரை சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 2 பேர் இறந்தனர். 2018-ம் ஆண்டில் 73 பேரும், 2017 -ம் ஆண்டில் 93 பேர் இறந்துள்ளனர்.
2016 -ம் ஆண்டில் 55 பேரும் , 2015-ம் ஆண்டில் 62 பேரும் , 2014-ம் ஆண்டில் 52 பேரும் , 2013-ம் ஆண்டில் 68 பேரும் , 2012-ம் ஆண்டில் 47 பேரும் , 2011-ம் ஆண்டில் 37 பேரும் , 2010 -ம் ஆண்டில் 27 பேர் இறந்தனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டுள்ளன என்றும் உண்மையான தகவல்கள் மாறுபடலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.