பாரதீய ஜனதாவில் சேர்ந்தது ஏன்? – குஷ்பு பேட்டி
1 min read
Why did you join the Bharatiya Janata Party? – Khushboo interview
12/10/2020
பாரதீய ஜனதாவில் இணைந்தது ஏன் என்ற நடிகை குஷ்பு கூறினார்.
குஷ்பு பேட்டி
நடிகை குஷ்பு பாரதீயா ஜனதாவில் சேர்ந்தார். டெல்லியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அவர் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாரதீய ஜனதா தலைவர் முருகன் கூறியதாவது:-
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பலரும் பாரதீய ஜனதாவில் சேருகின்றனர்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு பாரதீய ஜனதாவில் இணைந்திருக்கிறார். அவரை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு முருகன் கூறினார்.
குஷ்பு பேட்டி
பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பாரதீய ஜனதாவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார். மோடி மாதிரியான தலைவரால் மட்டுமே நாடு முன்னேற முடியும். ஆளும்கட்சியை விமர்சிப்பதே எதிர்கட்சிகளின் விதி . காங்கிரசில் இருந்த போதும் நான் பாரதீய ஜனதாவை ஆதரித்து பேசி உள்ளேன். நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் இந்தக் கட்சியில் இணைகிறேன். மாற்றம் என்பது இயல்பு. தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற சிறப்பாக செயல்படுவேன்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.