June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,435 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,435 people in Tamil Nadu today

3/11/2020

தமிழகத்தில் இன்று 2,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய தகவலை மாநில சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 2,435 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 19,201 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
டிஸ்சார்ஜ்

கொரோனா கண்டறியப்பட்டவர்களில் இன்று 2, 707 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து ஒரு ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 31 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.