June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா 2-ம் அலை பரவாமல் இருக்க மக்கள் கவனம் தேவை

1 min read

People need attention to keep the corona 2nd wave from spreading

3/11/2020

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவாமல் இருக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

குறைந்துவரும் கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

ஒரு கோடி ஆர்.டி., பி.சி.ஆர். கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

2-ம் அலை

கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். தொற்று அதிகம் பரவ பண்டிகைக் காலம் காரணமாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.