June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பாளையங்கோட்டை பா.ஜ.க. நிர்வாகி மீது துப்பாக்கிச்சூடு

1 min read

BJP administrator Shoot at Palayankottai

4/11/20202

பாளையங்கோட்டையில் நடந்த துப்பாக்கிச்சூடுட்டில் பாரதீய ஜனதா நிர்வாகி காயம் அடைந்தார்.

பாரதீய ஜனதா நிர்வாகி

திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை. பாரதீய ஜனதாவின் இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரது எதிர் வீட்டில் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி என்பவர் வசித்து வருகிறார்.

இன்று( புதன்கிழமை) காலை சிகரெட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே ஜெபமணி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பெரியதுரையை, பொதுமக்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்பிரிட்டோ தலைமையில் போலீசார் அங்கு சென்று ஜெபமணியை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர். கராத்தே செல்வினின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றுகை:

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், காயம் அடைந்த பெரியதுரையின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் பாஜகவின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆ.மகாராஜன் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.