தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா; 2,251 டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 1,707 people in Tamil Nadu today; 2,251 Discharge
19/11/2020
தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,251 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. கடந்த 6 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் கீழேதான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இன்றைய கொரோனா பரவல் பற்றிய தகவல்களை சுகாதாரதுறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்து 989 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து10 ஆயிரத்து 601 ஆக உள்ளது. சென்னையில் தொடர்ந்து 33-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
19 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்
கு உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 7 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை மொத்தம்11,550 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,251 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,39,532 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 13,907 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரிசோதனைகள்
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 67,115 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,13,33,206 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.