கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் காஷ்மீரில் விபத்தில் மரணம்
1 min readArmy soldier from Kovilpatti dies in accident in Kashmir
19/11/2020
காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம் அடைந்தார்.
ராணுவ வீரர்
காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (வயது 34) உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
மரணம்
காஷ்மீரின் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி இன்று( வியாழக்கிழமை) காலை நடந்த விபத்தில் மரணமடைந்தார்.
இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “ராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம். தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல்!” என்று பதிவிட்டுள்ளார்.