அசாம் முன்னாள் முதல்-மந்திரி மரணம்
1 min read
Former Assam Chief Minister Passes away
23/11/2020
அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் இன்று மரணம் அடைந்தார்.
தருண் கோகாய்
அசாம் மாநில முதல்-மந்திரியாக 3 முறை பதவி வகித்தவர் தருண் கோகாய் (வயது 82). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோகாய்க்கு கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கோகாய் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து கடந்த அக்டோபர் 25-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மரணம்
இதற்கிடையில், கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்காக அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக தருண் கோகாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பலனின்றி இன்று ( திங்கட்கிழமை) தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த தகவலை அசாம் சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தருண் கோகாயின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.