தமிழகத்தில் இன்று 1,132 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,132 people in Tamil Nadu today
15/12/2020
தமிழகத்தில் இன்று 1,132 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 34 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 94 லட்சத்து 22 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா அதிக பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மராட்டிய மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் கொரோனா இருந்து வருகிறது.
தமிழகத்தில்
தமிழகத்திலும் கொரோனா தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ( செவ்வாயக்கிழமை) 1,132 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 01 ஆயிரத்து 161 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,210 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 291 ஆக உயர்வடைந்து உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 10 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 11,919 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 9,951 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று மட்டும் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,560 ஆக அதிகரித்துள்ளது.