June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மனைவியைக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை

1 min read

Death penalty for murder of wife

15/12/2020

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி கற்பகவள்ளி. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுரேஷ் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கொலை செய்தார். இந்தக் கொலை கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்தது. இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

தூக்கு தண்டனை

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி சுரேசிற்கு 10000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *