கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ் செயல்விளக்கம் காட்டியபோது மயக்கம்
1 min read
Fainting when the nurse who administered the corona vaccine showed activity
20/12/2020
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் டெலிஷனில் நேரடியாக செயல்விளக்கம் காட்டியது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து அதை மக்களுக்கு போட்டு வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நா்சுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் டிஃபானி பாண்டிஸ் டோவர் (வயது 30) என்ற நர்ஸ்தான் முதன்முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், அதுபற்றி மக்களுக்கு டெலிவிஷனில் விளக்கம் அளித்தார். இது நேடியாக ஒளிபரப்பப்பட்டது. அவர் கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்பது பற்றி விளக்கினார்.
மயக்கம்
அப்போது அவர் திடீரென்று மயங்கிச் சரிந்தார். இதை டெலிவிஷனில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்ட, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’ கண்டனம் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என்று கூறினார்கள். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
வழக்கமானதுதான்
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது நர்சை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால் அவர் சற்று நேரத்தில் சிரித்த முகத்துடன் எழுந்தார். தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறினார்.