July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி

1 min read

Corona vaccine in India next month

21/20/2020

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் அடுத்த மாதம் (ஜனவரி) பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு வருகிறது. ராணுவ வீரர்கள், முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

20 ஆயிரம் பேருக்கு பயிற்சி

கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அதில் எவ்வித சமரசமும் காட்டப்படாது.

முன்னெச்சரிக்கை

இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 97 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

மேலும் இந்தியாவில் கோவிட் -19 மோசமான காலம் முடிந்துவிட்டது, ஆனால் முன்னெச்சரிக்கைகள் இன்னும் நமக்கு தேவைப்படுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.