பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை
1 min read
Prohibition of celebrating the New Year in public places
21/12/2020
தமிழகத்தில் கடற்கரைகளிலும் சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக 31-ந் தேதி நள்ளிரவு இளைஞர்கள் கடற்கரை, சாலைகளில் கூடி நின்று ஹேப்பி நியூ இயர் என்று கோஷமிட்டு கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது மதக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு தமிழக அனுமதி அளிக்கவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ந் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் கொரோனா அதிகரிக்கக்கூடும் என கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.