June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

8 பேருக்கு கொரோனா-அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

1 min read

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Corona infection in 8 people -Annatha shooting stop

23.12.2020

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த ”அண்ணாத்த” படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதில் ரஜினிகாந்த், மினா, குஷ்பு, நயன்தாரா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரஷினி சம்பந்தப்பட்ட காட்சிகள் திவிரமாக படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் படக்குழுவினர் 8 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து வெளியேறினார். அவர் சென்னை திரும்புகிறார் என கூறப்பட்டது.

இதற்கிடையே ரஜினிகாந்த்துக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது. என்றாலும் ரஜினிகாந்த்த ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.