சனி பெயர்ச்சி பலன்கள்- ரிஷபம்
1 min read
Sani perchi palangal kaliyur narayanan
25-12-2020
ரிஷபம்
நிதானமே உங்கள் டிரேடு மார்க். அதுதான் உங்களுக்கு மூலதனம். அந்த நிதானம் உங்களுக்கு பல வழிகளில் வெற்றியைத் தேடித் தரும். அதுவே வாழ்க்கையில் முன்னேறத்தையும் கொடுக்கும். உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன். எனவே நீங்கள் யாரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவீர்கள். இந்த தன்மையால் நீங்கள் பிறரை எளிதில் கவர்வீர்கள். சுக்கிரன் ஆட்சி நாயகன் என்பதால் நீங்கள் கலாரசிகனாக இருப்பீர்கள். சுக்கிரன் பலமாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் சினிமா மற்றும் கலைத்துறையில் சிறந்த விளங்குவார்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆண் என்றால் மனைவியையும் பெண் என்றால் கணவரையும் வசியப்படுத்தி விடுவார்கள். எனவே இவர்களது தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சந்திரன் உங்கள் ராசியில் உச்சம் பெறுவார். இதனால் நீங்கள் அறிவார்ந்த செயலில் ஈடுபடுவீர்கள். எதையும் சிந்தித்து தீர்மான முடிவுக்கு வருவீர்கள். அதேநேரம் உங்களை யாரும் அவ்வளவு எளிதில் எடை போட்டுவிட முடியாது. இவரால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பார்கள். ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருந்தார். இது அஷ்டமத்து சனி காலம். இந்த இடத்தில் அவரால் நன்மை செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் நீங்கள் எண்ணற்ற இன்னலுக்கு ஆளாகி இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி இருப்பார். இதனால் பல நேரங்களில் தோல்வியை சந்தித்து இருப்பீர்கள். தொழிலில் பொருள் இழப்புகள் ஏற்பட்டு இருக்கும். இதில்தான் இப்படி என்றால் சொந்தபந்தங்களும் உங்களுக்கு உதவிரகரமாக இருந்திருக்க மாட்டார்கள். உதவிகள் செய்யா& விட்டாலும் பரவாயில்லை. உபத்திரம் செய்யாமல் இருந்தால் சரி என்று நினைத்தால் அர்களால் பிரச்சினைகளையும் மனக் கசப்புகளையும் சந்தித்து இருப்பீர்கள். சிலர் தங்கள் இருப்பிடத்தை இழந்து வெளியூர் வாசம் செய்யும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். தொழில் நிமித்தமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூர் சென்றாலும் அங்கும் முன்னேற்றம் தரும் செயல்களை கண்டிருக்கமாட்டீர்கள்.
ஆனால் இந்த சனிப்பெயர்ச்சி மூலம் இந்த இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். சனிபகவான் 9&ம் இடத்திற்கு இடம்மாறி இந்த பிற்போக்கான வாழ்வில் இருந்து விடுபடச் செய்வார். சங்கடங்கள் படிப்படியாக குறையும். நெருக்கடியான வாழ்வில் இருந்து சகஜமான நிலையை அடைவீர்கள்.
தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறும் சனிபகவான் உங்களுக்கு முழு நன்மையையும் தருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். சிற்சில சறுக்கல்களை தரத்தான் செய்வார். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. முட்கள் நிறைந்த பாதையில் இருந்த கற்கள் நிறைந்த பாதைக்கு வந்தால் அந்த கற்களும் மெத்தையாகத்தான் தோன்றும். அதாவது இனி சனிபகவானால் வரும் தடைகள் எல்லாம் நன்மைக்காகவும் உங்களை எச்சரிக்கை செய்வதாகவும்தான் இருக்கும். எதிலும் அதக முதலீடு போடக்கூடாது. சிலருக்கு சொந்த தொழிலைவிட பிறரிடம் வேலை பார்ப்பதில்தான் அதிக வருவாய் கிடைக்கும். அதை உணர்ந்து செயல்படுங்கள். அதே நேரம் ஏற்கனவே தொழிலில் இருப்பவர்கள் பண விசயத்தில் யாரையும் நம்பிவிடாதீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேல் அதிகாரியிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
மேலே சொன்னதெல்லாம் சனிபகவான் தரும் எச்சரிக்கை. உங்கள் ராசிக்கு அவர் நட்பு கிரகம் என்பதால் அவரின் கடுமை உங்களை ஒன்றும் செய்யாது. அவர் இருக்கும் இடத்தில் இருந்து நன்மை தர முடியாதவராக இருந்தாலும் தனது பார்வைகளால் எண்ணற்ற நற்பலனை தர காத்திருக்கிறார். சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். இந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதன்மூலம் நீங்கள் சாதனை படைக்கலாம்.
அவரது மூன்றாம் இடத்துப்பார்வை 11-ம் இடமான மீனத்தில் விழுகிறது. இதனால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி நிலவும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். சனிபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூன்றாம் இடமான கடகத்தில் விழுகிறது. இதனால் காரிய அனுகூலத்தைப் பெறலாம். தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை ஆறாம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இதனால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம். எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
பொதுவாக கோச்சார பலனை கணிக்கும்போது மற்றமுக்கிய கிரகங்களான குரு, ராகு-கேதுவையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் குருபகவான் இரு முறையும் ராகு&கேது ஒரு முறையும் இடம் பெயருகிறார்கள்.