சனி பெயர்ச்சி பலன்கள் -மீனம்
1 min read
Saniperchi palangal- Meenam- kaliyur Narayanan
25-12-2020
குருபகவானை ஆட்சி நாயகமாக கொண்ட நீங்கள் சான்றோர்களிடமும், ஞானிகளிடமும் மிகுந்த மரியாதை வைத்திருப்பீர்கள். வேதம் கற்றவர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். உங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியரை என்றும் மறக்கமாட்டீர்கள். அவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறையவே உண்டு. உங்கள் ஜாதகத் &தில் குருபகவான் சிறப்பான நிலையில் இருந்திருந்தால் இந்த ராசியினர் ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவார்கள். உங்கள் ராசிக்கு சுக்கிரன் உச்சமாக இருப்பதால் நீங்கள் சிறந்த கலா ரசனை உடையவராக இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால் நீங்கள் சிறந்த கலைஞராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு செவ்வாயைத் தவிர மற்ற பகைக் கிரகங்கள் இல்லாததால் நீங்கள் எதையும் சமாளிக்கும் வல்வராக இருப்பீர்கள். பொதுவாக நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்குவீர்கள். இரக்க குணம் உடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதை உள்ளவர்கள். சொத்துக்களை உடையவர்களாக இருப்பீர்கள். உங்கள் கண்களுக்கு தனி ஈர்ப்பு தன்மை உண்டு. உங்கள் ராசியின் சின்னம் மீன். அதைபோல் நீங்கள் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் நழுவி தப்பிவிடுவீர்கள். உங்களிடம் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை கசியவிட மாட்டீர்கள். சிலர் தாங்கள் பட்ட அவமானத்தை& தான் பிறரிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால் நீங்களோ பிறர் சந்தித்த அவமானத்தை கூட வெளியிட மாட்டீர்கள். யாரையும் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்க மாட்டீர்கள்.
சனிபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசுவில் இருந்தார். இது சுமாரான நிலைதான். அவரால் சிலர் அவப்பெயரையும் பொல்லாப்பையும் சந்தித்து இருக்கலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வந்திருக்கும். சனிபகவான் இருப்பிடமும் சரியில்லாத நிலையில் அவரின் பார்வையாலும் நன்மை தர இயலாதவராகத் தான் இருந்தார். இதனால் சிற்சில கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள். சிலர் தங்கள் கஷ்டத்தை வெளியிலே சொல்லாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பீர்கள். ஆனாலும் அவ்வப்போது குரு மற்றும் ராகு&கேதுவால் நன்மைகளை கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் கிரங்கள் சிறப்பாக இருந்திருந்தாலும் தசாபுத்தி நன்றாக இருந்திருந்தாலும் நீங்கள் இன்னலை காணாது சிறப்பாகவே இருந்திருப்பீர்கள்.
இந்த நிலையில்தான் தற்போது சனிபகவான் இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகரத்திற்கு வந்துள்ளார். இது மிக சிறப்பான இடம். இங்கு அவர் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தர இருக்கிறார். குறிப்பாக பொன்னையும் பொருளையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று ஆனந்தமாக இருக்கும். கடந்த காலம் பெண்களால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி இருப்பீர்கள். ஆனால் அதேப் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் நன்மை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற முக்கிய கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சனிபகவான் மகர ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலத்தில் குருபகவான் இரு முறையும், ராகு-கேது ஒருமுறையும் இடம் பெயருகிறார்கள். அதையும் கணக்கில் கொண்டுதான் முழுபலனையும் காணவேண்டும்.