திருமணத்திற்காக மத மாற்றம் செய்த 35 பேர் கைது
1 min read
35 arrested for converting to Islam for marriage
26-12-2020
உத்திரப்பிரதேசத்தில், திருமணத்திற்காக மத மாற்றம் செய்ததாக ஒரே மாதத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதமாற்றம்
திருமணத்திற்காக மதமாற்றத்தில் ஈடுபடும் விவகாரத்தில், சில வாரங்களுக்கு முன்னர், காதல் திருமணம் எனும்போது அதில் மதம் ஏன் குறுக்கிடுகிறது என அலகாபாத் ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கான சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து, திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த ஒரு மாதத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.