June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாரதியாரின் கவிதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தென்காசி டாக்டர்

1 min read
Tenkasi Doctor translated Bharathiyar's poem into English
26-12-2020
 மகாகவி பாரதியாரின் கவிதைகள் அனைத்தும் உணர்ச்சி பொங்க இருக்கும். அவர் சுதந்திர வேட்கையை தனது கவிதை வரிகளில் காட்டியிருப்பார். அவர் எட்டயபுரத்தில் பிறந்திருந்தாலும் அந்த ஊர் மட்டுமல்லாது, அவர் பெண் எடுத்த கடையம், அடைக்கலம்  புகுந்த புதுச்சேரி, சென்னை ஆகிய பகுதிகள் அவரது கவிதைகளுக்கு களமாக விளங்கின.
 அவரது கவிதைகளை பாரதி அன்பரும் டாக்டருமான தென்காசி தங்கபாண்டியன்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். இதை  புத்தகமாக  டாக்டர் திருவன் அச்சிட்டுள்ளார்.
 அந்த புத்தகத்தை பாரதியின் 139&வது பிறந்த நாளில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். எட்டயபுரத்தில் நடந்த இந்த விழாவில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, பாரதி மணிமண்டப காப்பாளர் பினோ, குற்றாலம் பொதிகை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கல்யாணி சிவகாமிநாதன், கதிர்வேல், கார்த்திக் ராஜா,  ஐயப்பன்,  தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பழனி செல்வம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.