தாய் வீட்டுக்கு வந்தது உருமாறிய கொரோனா
1 min read
The mother came home with the transformed corona
1-1-2021
சீனாவில் உருவான கொரோனா இங்கிலாந்தில் உருமாறி பிறந்த வீடான சீனாவுக்கு சென்றுள்ளது.
கொரோனா
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா கடந்த 2019&ம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் கூபேய் மாகாணம் உகான் நகரில் உருவானது. ஆனால் இந்த நோயின் தாக்கம் சீனாவை விட அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்க இறந்துள்ளனர்.
இந்த கொரோனா இங்கிலாந்தில் உருமாறியது. கடந்த மாதம் (டிசம்பர்) உருமாறிய இந்த கொரோனா படுவேகமாக பரவும். அதாவது சாதராண கொரோனாவை விட இது 70 மடங்கு வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சீனாவில் பரவாமல் இருந்தது.
சீனா
தற்போது, சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14-ம் தேதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அது உருமாறிய கொரோனா வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் உருவான கொரோனா உருமாறிய கொரோனாவாக மாறி பிறந்தவீட்டுக்கே சென்றதுபோல் சீனாவிற்கு சென்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் உருவான கொரோனா உருமாறி மீண்டும் 2020 டிசம்பர் மாதம் சீனாவையே வந்தடைந்துள்ளது.