June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

2021 புத்தாண்டு பலன்கள்/ கடகம்

1 min read
 2021 New year palangal/ Kadagam/ Kaliyur Narayanan

கடக ராசி அன்பர்களே! சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் வெள்ளை மனது கொண்டவர்கள். பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிந்துவிடுவீர்கள். ராகு உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார். அவரின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் அவர் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 11-ம்இடமான ரிஷபத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியா -கும். உத்தியோகத்தில் உயர்வை தருவார். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்காது.அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.வீண்விரோதத்தை உருவாக்குவார். இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது 7-ம் இடத்துபார்வைப் சாதகமாக காணப்படுகிறது. இதனால் மந்த நிலை மாறும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
தற்போது சனிபகவான் 7-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்கு -வார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலங்களில் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசியில் -தான் இருக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மைதர இயலாது ஆனால் வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார் மாறக நன்மையே தர ஆயத்தமாவார்.
கேது இப்போது 5-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் இதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது .சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினை- யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி இருக்கும்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
குரு, ராகுவால் எடுத்த எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
பெண்களால் அனுகூலம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனி -யம் நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகத்தில் சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு -கள் மறையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப்- பெறலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது. தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். வழக்கமான சம்பளஉயர்வு, சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது.
வியாபாரம் சிறப்படையும். நஷ்டம் இருக்காது. கணினித் தொழில், பத்திரிகை, இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்- களை வாங்கிவிற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்கு -தாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கலாம். ஆனால் அதற்கு பணமுதலீட்டைவிட அறிவை பயன்படுத்தி ஆரம்பிக்க வேண்டும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். மேலும் பண விஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர்.மகிழ்ச்சியுடன் காணப்படுவர். காரியத்தடை, பொருள்நஷ்டம், அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனை -யாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம். பதவியும், பணமும் கிடைக்கும். பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும். சமூகநல சேவகர்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பைக் காணலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டியது இருக்கும். இருப்பினும் குருவின் பார்வை பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். பாசி பயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.புதிய சொத்து வாங்கலாம். கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தோடு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணம் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை காணாலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் இருக்கும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை விட்டுக் கொடுத்துப் போகவும். முக்கிய காரியங்களை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.
உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள் சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். பார்வை யற்றவர்களுக்க இயன்ற உதவி செய்யுங்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.