இங்கிலாந்தில் கொரோனா இறப்பு அதிகரிப்பு
1 min read
Corona mortality increase in the UK
2.1.2021
இங்கிலாந்தில் கொரோனா இறப்பு விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா
சீனாவில் உருவான கொரோனா மற்ற நாடுகளில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பெரிய ஆஸ்பத்திரிகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா உருமாறிய கொரோனாவாக மாறி வேகமாக பரவி வருகிறது. இதனால் 4&வது நாளாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது.
அந்த நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2,542,065 என உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 28 நாட்களில் 74,125 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
வடகிழக்கு லண்டனில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோயாளிகளின் அதிகரிக்கும் எண்ணிக்கையால் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஆஸ்பத்திரிகளில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் நோயாளிகளை பராமரிக்க போதுமான நர்சுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் லண்டனில் பல மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது.
விஞ்ஞானிகள் கோரிக்கை
இந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போதைய ஊரடங்கு அடுக்கு முறை கட்டுப்பாடுகளைவிட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் விஞ்ஞானிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.